search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கை"

    • மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, யுஜிசி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
    • அக்டோபர் 30ம் தேதிக்குள் விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அக்டோபர் 30ம் தேதிக்குள் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

    மாணவர் சேர்க்கையை ரத்து செய்த பிறகும் அல்லது கல்லூரியில் இருந்து விலகிய பிறகும் உயர் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை திரும்ப வழங்காதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, இதுதொடர்பாக யுஜிசி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

    • நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

    தற்போது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் நிறைய காலியிடங்கள் இருப்பதால் அந்த பாடப்பிரிவினருக்கு இன ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    அந்த 6 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் இன்று கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று கல்லூரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இணையதளம் வழியாக விண்ணப்பித்து தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளுக்கும் இடங்களை மேற்கண்ட காலியான பாடப்பிரிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் அந்த பாடப்பிரிவினருக்கு தகுதியானவர்கள் இன ஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் கூறியுள்ளார்.

    • தொண்டி பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.
    • ஆசிரியைகள் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கலந்துரையாடினர்.

    தொண்டி

    தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பள்ளி சேர்க்கை, கல்வியின் முக்கியத்துவம் குறித்த பதாதைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    மேலும் மழலையர் பள்ளி துவக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பேரீச்சம் பழம், பென்சில் கொடுத்து பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் வரவேற்றனர். பின்னர் ஆசிரியைகள் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கலந்துரையாடினர்.

    • இப்பள்ளியில் பயிலும் மாணக்கர்களுக்கு விடுதியில் மூன்று வேளையும் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.
    • இலவச சீருடை, சிறப்பு கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து சலுகை, கல்வி உதவித்தெகை போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    தருமபுரி, 

    தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வை யற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 2023-2024 ஆம் ஆண்டு மாணக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப் பள்ளியானது தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைபள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியானது 1 முதல் 5 வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கி பயிலும் வகையில் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி பயின்ற ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் பயிலும் மாணக்கர்களுக்கு விடுதியில் மூன்று வேளையும் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.

    மேலும் இலவச சீருடை, சிறப்பு கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து சலுகை, கல்வி உதவித்தெகை போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.

    மேலும் தொடர்புக்கு தலைமையாசிரியர் (பொ), அரசு பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளி, செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், இலக்கியம்பட்டி தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் 7373773486, 043432-232418 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

    எனவே பார்வைதிறன் குறைபாடுடைய மாணவர்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி பள்ளியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் முழுநேரப் பள்ளியாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து இசைப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், கிருஷ்ணகிரியில் மாவட்ட அரச இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் முழுநேரப் பள்ளியாகும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தப்பட்டு, அரசுத் தேர்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும்.

    மாணவ, மாணவியர்களுக்கு நகரப் பேருந்தில் இலவச பேருந்து பயணச் சலுகை உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், திருமலை நகர் ராமாபுரம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர் சேர்க்கைக் குறைவு என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு பட்டப்படிப்புகளை நிறுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது
    • அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம் தான் அடிப்படை ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி, 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளம் அறிவியல் (பி.எஸ்சி) கணிதம் பட்டப்படிப்பையும், ஒரு கல்லூரியில் இயற்பியல் படிப்பையும், இன்னொரு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் படிப்பையும் நிறுத்துவதற்கும், அவற்றுக்கு மாற்றாக மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ள புதிய பட்டப்படிப்புகளை தொடங்குவதற்கும் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்திருக்கிறது.

    மாணவர் சேர்க்கைக் குறைவு என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு பட்டப்படிப்புகளை நிறுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ள, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் புதிய பட்டப்படிப்புகளைத் தொடங்குவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அது கூடுதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, கணிதம் பட்டப்படிப்பை மூடிவிட்டு, வேறு படிப்பை தொடங்க வேண்டிய தேவையில்லை.

    அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம் தான் அடிப்படை ஆகும். எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுவது, கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கணிதம் படிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2023-2024 ஆம் ஆண்டிற்கான விடுதி சேர்க்கை நடைபெறுகிறது.
    • மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியுடனோ 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சங்கராபுரம் மாணவர் விடுதி, புதுப்பட்டு மாணவர் விடுதி மற்றும் சங்கராபுரம் தொழிற்பயிற்சி மாணவர் விடுதி ஆகியவற்றில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான விடுதி சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், இந்த விடுதிகளில் மாணவர்கள் தங்கி பயில்வதற்கு விடுதி மேலாண்மை செயலியின் மூலம் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியுடனோ 30-ந்தேதி வரை விண்ண ப்பித்து மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று பயன்பெறலாம் இவ்வாறு அவர் கூறினார்.

    • இளநிலைப் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • காலியிடங்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி இளநிலைப் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல் பி.எஸ்.சி., தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) பொது கலந்தாய்வு நடக்கிறது. பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ., – வரலாறு, பொருளியல், தமிழ், ஆங்கிலம் பி.லிட், தமிழ், ஆங்கிலம் ஆகிய அனைத்து கலைப் பாடப்பிரிவுகளுக்கும் வருகிற ஜூன், 19-ந் தேதி கலந்தாய்வு நடக்கிறது. இதில், ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

    கலந்தாய்வின் போது இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ் (அசல், இ.எம்.ஐ.எஸ் எண்ணுடன்) மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு அசல் சான்றிதழ்கள்) சாதிச் சான்றிதழ் (அசல்) வருமானச் சான்றிதழ், 4 மார்பளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவை எடுத்து வரவேண்டும். கலைப்பிரிவுக்கு, 2,100 ரூபாய், அறிவியல் பிரிவிற்கு, 2,120 ரூபாய், கணினி அறிவியல் பிரிவிற்கு, 1,220 ரூபாய் சேர்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும். காலியிடங்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்களிடம் சென்று அரசு பள்ளியின் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்திலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்று வட்டாரத்தில் இரண்டு துவக்க பள்ளிகளும், ஊட்ட மலை பகுதியில் ஒரு அரசு மேல்நிலை பள்ளியும் இயங்கி வருகிறது.

    இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

    இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிக்கு நிகராக ஒகேனக்கல் மூத்தமழை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் ஊட்டமலை, ராணிப்பேட்டை, சத்திரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்களிடம் வீடு வீடாகச் சென்று அரசு பள்ளியின் சேர்க்கை குறித்தும் பாடத்திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்ேபாது விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்திலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்த நிகழ்வால் அப்பகுதி மக்களிடையே தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியும் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகின்றனர்.

    • ராமநாதபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது.
    • முடிவில் சின்னக்கடை கான்சாகிப் அறக்கட்டளை சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கர்ணன், வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஆசிரியர் பயிற்றுனர் முருகவேல் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.

    புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேனி சை.அக்கீம் (ராமநாதபுரம் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர்),காளீஸ்வரி மாலை அணிவித்து இனிப்பு மற்றும் பேனா, பென்சில் வழங்கி வரவேற்றனர்.

    ஆசிரியர்கள் மாதவி, பழனியம்மாள், உமா மகேஸ்வரி, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னக்கடை கான்சாகிப் அறக்கட்டளை சார்பில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்.

    • என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
    • கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    இதன்படி கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை வருகிற 14-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவ- மாணவிகள் இந்த கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர்.

    • முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன.
    • தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 2- ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 12 ம் தேதியன்று நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர். சோ.கி.கல்யாணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்த 864 இடங்களில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 286 காலி இடங்களுக்கு 2- ம் கட்ட கலந்தாய்வு 12 ம் தேதி நடைபெற உள்ளது.அறிவியல் பாடப்பிரிவு தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்களில், இயற்பியல்,கணிதம், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்குத் தகுதியுள்ள, பிளஸ்-2வில் கணிதம் பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

    கணினி அறிவியல்(சுழற்சி II),தாவரவியல் ,வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பின்தங்கிய வகுப்பில் (பிசி.,) ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.இவ்விடங்களுக்கான கலந்தாய்வில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த, பிளஸ்-2வில் – கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களைப் பயின்ற விண்ணப்பதாரர்கள் 12 -ந் தேதியன்று காலை 9 மணிக்கு கலந்து கொள்ளலாம்.

    கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பிபிஏ, பி.காம், பிகாம்(சிஏ), பி.காம்(இ.காம்) , அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கைக் கலந்தாய்வில்,பிளஸ்-2வில் தொழில்முறை பாடப்பிரிவில் பயின்ற, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு தரவரிசை 1208 முதல் 2651 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் காலை 11 மணிக்கு கலந்து கொள்ளலாம்.இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள பின்தங்கிய வகுப்பு (பி.சி.,) மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பு (எம்.பி.சி.) இடங்களுக்கு மட்டும், தமிழ் பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் 12.6.2023 அன்று பிற்பகல் 1மணிக்குக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு அனைத்து வகுப்பினை சேர்ந்த, ஆங்கில பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்களும் 2- ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு கல்லூரியின் www.gacudpt.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×